Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மானிய வட்டியில் வீடு கட்டுவதற்கு கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

Print PDF

தினமணி    28.05.2010

மானிய வட்டியில் வீடு கட்டுவதற்கு கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

மதுரை, மே 27: மதுரை மாவட்டத்தில் மானிய வட்டியில் வீடுகள் கட்டுவதற்கும் மற்றும் வீடு வாஙகவும் கடன் பெறுவதற்கு ஏழை, எளியவர்கள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குநர் தர்மேந்திர பிரதாப் யாதவ் ஆகியோர் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ் கூறியது:

நகராட்சி, பேருராட்சி பகுதிகளில் வசித்து வரும் பொருளாராத்தில் பின்தங்கிய பிரிவினர் மாத வருமானம் ரூ.5000 வரையிலும், நலிவுற்ற பிரிவினர் மாத வருமானம் ரூ.5001 முதல் ரூ.10,000 வரையில் இருக்க வேண்டும். நலிவுற்ற பிரிவினருக்கு ரூ.1 லட்சமும், குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரையிலும் கடனாக வழங்கப்படும். இந்தக் கடன் தொகையை 15 முதல் 20 ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்த வேண்டும்.

கடன் தொகை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறும் கடன்களுக்கு வட்டியில் 5 சதவீதம் மானியம் வழங்கப்படும். கூடுதல் கடன் தொகை தேவைப்படுகிறவர்களுக்கு கூடுதல் தொகைகளுக்கு ஏற்ப வழக்கமான வட்டி வசூலிக்கப்படும். பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு கட்டப்படும் வீடுகள் குறைந்தபட்சம் 25 சதுர மீட்டர் பரப்பளவில் இருக்க வேண்டும். சொந்த வீடுகள் இல்லாதவர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

சொந்தமாக நிலம் வைத்திருப்போர் அதற்கான பட்டா உரிமை பெற்று இருக்க வேண்டும். இலவச வீட்டுமனை பெற்றவர்களும் இந்தத் திட்டத்தில் மூலம் பயன் அடையலாம். இது தொடர்பாக எல்லீஸ் நகரில் உள்ள மதுரை வீட்டு வசதிப் பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலரை அணுகி விண்ணப்பித்து பயன் பெறலாம்.