தினமணி 30.06.2010
வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு கட்டுமானப் பயிற்சி
திருவள்ளூர், ஜூன் 29: திருவள்ளூர் மாவட்டத்தில் பேரூராட்சி பகுதியில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களில் வேலை வாய்ப்பற்றவர்களுக்கு எல் அண்டு டி நிறுவனம் சார்பில் கட்டுமானப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் சாரம் அமைத்தல், ஷட்டரில் கம்பி வளைத்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. 5-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்களும், ஐடிஐ முடித்தவர்களும் இந்த பயிற்சியில் பங்கேற்கலாம்.
இப்பயிற்சியில் சேர விரும்புவோர் சம்மந்தப்பட்ட பேரூராட்சியில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளோர் பட்டியலை சரிபாத்து அங்குள்ள செயல் அலுவலரிடம் தங்களது விண்ணப்பத்தை வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.