Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.9.80 லட்சத்தில் நடைபாதை வாசிகளுக்கு விரைவில் தங்கும் விடுதி வேலூர் மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தினகரன் 28.07.2010

ரூ.9.80 லட்சத்தில் நடைபாதை வாசிகளுக்கு விரைவில் தங்கும் விடுதி வேலூர் மாநகராட்சி நடவடிக்கை

வேலூர், ஜூலை 28: வேலூர் மாநகராட்சி பிளாட்பாரங்களில் 107 பேர் வசிப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இவர்களுக்காக ரூ.9.80 லட்சத்தில் தங்கும் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நகர்புறங்களில் பிளாட்பாரத்தில் தனியாகவும், குடும்பங்களாவும் பலர் வசிக்கின்றனர். மழை, குளிர் காலங்களில் எந்த பாதுகாப்பும் இன்றி தவிக்கும் இவர்களுக்கு வாழ்வுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கான நடவடிக்கையில் அந்தந்த மாநில உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. தமிழகத்தில் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் பிளாட்பாரங்களில் வசிப்பவர்களை கணக்கெடுத்து அறிக்கை அளிக்க அரசு உத்தரவிட்டது.

அதன்படி வேலூர் மாநகராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 107 பேர் பிளாட்பாரத்தில் வசிப்பது தெரியவந்துள்ளது. அதே போல ஆம்பூரில் 8 குழந்தைகள், 37 பெரியவர்கள், வாணியம்பாடியில் 7 பேர், ராணிப்பேட்டையில் 3 பேர், திருப்பத்தூரில் 12 பேர் என தெரிய வந்துள்ளது.

வேலூர் மாநகராட்சியில் பிளாட்பார வாசிகளை தங்க வைக்க போதிய இட வசதி எங்கும் இல்லை. இதனால், டிட்டர்லைன் ரோட்டில் ரூ.9.80 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட் டப்பட உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி உள்ளது. இங்கு பிளாட்பாரவாசிகள் தங்கவும், குளியல் வசதி, பொருட்களை பாதுகாக்கும் பெட்டக வசதி, கழிப்பிட வசதி செய்துகொடுக்கப்பட உள்ளது.