Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நடைபாதை வியாபாரிகளுக்கு பீ6 கோடியில் 1,188 கடைகள்

Print PDF

தினகரன் 29.07.2010

நடைபாதை வியாபாரிகளுக்கு பீ6 கோடியில் 1,188 கடைகள்

சென்னை, ஜூலை 29:அயனாவரம், பாலவாயல் சாலையில் நடைபாதை வியாபாரிகளுக்காக வணிக வளாகம் கட்டப்படுகிறது. இந்த பணியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். பின்னர் மேயர் கூறியதாவது: நடைபாதை வியாபாரிகளுக்காக மாநகராட்சி சார்பில் பாண்டிபஜாரில் பீ4.3 கோடி செலவில் தரை தளம் மற்றும் மூன்று தளங்களுடன் வணிக வளாகம் கட்டப்படுகிறது. இதில் 692 கடைகள் இருக்கும். பாலவாயல் சாலையில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்காக பீ1.23 கோடி செலவில் 16,400 சதுர அடியில் தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் 363 கடைகள் கட்டப்படுகிறது. ராயபுரம் எம்.சி.சாலையில் நடைபாதை வியாபாரிகளுக்கு பீ27 லட்சத்தில் 2,615 சதுர அடியில் 133 கடைகள் கட்டப்படுகிறது. 3 இடங்களிலும் சேர்த்து 1,185 கடைகள் கட்டும் பணி அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் முடியும். தி.நகரில் உஸ்மான் சாலை, பாண்டி பஜாரில் சிவப்பிரகாசம் சாலை, அயனாவரத்தில் பாலவாயல் சாலை, ராயபுரத்தில் மணியக்கார சத்திரத் தெரு ஆகிய இடங்களில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும். அதற்கான ஆணைகளை துணை முதல்வர் மு..ஸ்டாலின் வழங்கவுள்ளார். பின்னர் மேயர் கூறியதாவது: நடைபாதை வியாபாரிகளுக்காக மாநகராட்சி சார்பில் பாண்டிபஜாரில் பீ4.3 கோடி செலவில் தரை தளம் மற்றும் மூன்று தளங்களுடன் வணிக வளாகம் கட்டப்படுகிறது. இதில் 692 கடைகள் இருக்கும். பாலவாயல் சாலையில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்காக பீ1.23 கோடி செலவில் 16,400 சதுர அடியில் தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் 363 கடைகள் கட்டப்படுகிறது. ராயபுரம் எம்.சி.சாலையில் நடைபாதை வியாபாரிகளுக்கு பீ27 லட்சத்தில் 2,615 சதுர அடியில் 133 கடைகள் கட்டப்படுகிறது. 3 இடங்களிலும் சேர்த்து 1,185 கடைகள் கட்டும் பணி அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் முடியும். தி.நகரில் உஸ்மான் சாலை, பாண்டி பஜாரில் சிவப்பிரகாசம் சாலை, அயனாவரத்தில் பாலவாயல் சாலை, ராயபுரத்தில் மணியக்கார சத்திரத் தெரு ஆகிய இடங்களில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும். அதற்கான ஆணைகளை துணை முதல்வர் மு..ஸ்டாலின் வழங்கவுள்ளார். இவ்வாறு மேயர் கூறினார். வி.எஸ். பாபு எம் எல் ஏ, மற்றும் மா நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்