தினமணி 02.08.2010
இலவச வீட்டுமனைப் பட்டா பெறும் ஏழைகளுக்கு வருமான வரம்பு உயர்வு
நாகர்கோவில், ஆக. 1: இலவச வீட்டுமனைப் பட்டா பெறும் ஏழைகளுக்கு வருமான வரம்பில் உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா பெறும் ஏழை குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா பெறும் வருமான வரம்பை கிராமப் பகுதிகளுக்கு ரூ. 16 ஆயிரம் என்று இருந்ததை ரூ. 30 ஆயிரம் என்றும், நகர்ப்புற பகுதிகளுக்கு ரூ. 24 ஆயிரம் என்று இருந்ததை ரூ. 50 ஆயிரம் என்றும் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.