தினமணி 06.09.2010
மானிய வட்டியுடன் வீட்டுக் கடன் பெற விண்ணப்பித்தோர் கவனிக்க
மதுரை, செப். 5: நகர்ப்புற ஏழை மக்களுக்கான மானிய வட்டியுடன் கூடிய வீடு கட்ட கடன் பெறுவதற்காக ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் வங்கிக்கு அளிக்க வேண்டிய முறையான விண்ணப்பப் படிவத்தை நேரில் பெற்று முழுமையாகப் பூர்த்தி செய்து, மதுரை எல்லீஸ் நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி பிரிவு அலுவலகத்தில் மேல்நடவடிக்கைக்காக சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இது தொடர்பாக க.அசோகன், வரைவு அலுவலர், மதுரை மாவட்டம் (94437 96786), தி.தர்மர், வரைவு அலுவலர், திண்டுக்கல் மாவட்டம் (93452 00708), வா.பாலசுப்பிரமணியன், வரைவு அலுவலர், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டம் (99941 68214) ஆகியோரை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.
இந்தத் தகவலை வீட்டு வசதி வாரிய, மதுரைப் பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி பி.சுப்பிரமணியன் ஓர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.