Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஏழை, நடுத்தர மக்கள் வீடு கட்ட கடன்

Print PDF

தினகரன் 12.01.2010

ஏழை, நடுத்தர மக்கள் வீடு கட்ட கடன்

காஞ்சிபுரம் : கலெக்டர் சந்தோஷ் மிஸ்ரா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: Ôகாஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற ஏழை மக்களுக்கு மானியத்தில் வீடு கட்ட கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் நகர எல்லைக்குள் வீடு கட்டுவதற்கும் வீடு வாங்குவதற்கும் மாநகராட்சி நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

மாத வருமானம் ரூ.3,300 இருப்பவர்கள் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள் என்றும் ரூ.3.301 முதல் ரூ 7.300 வரை இருப்பவர்கள் நடுத்தர வருமானம் உடையவர்கள் என்றும் 2 வகையாகப் பிரிக்கப்படும்.

நலிவுற்ற பிரிவினருக்கு ரூ.1 லட்சமும் நடுத்தர வருமான பிரிவினருக்கு ரூ.1 லட்சத்து 60,000மும் கடன் வழங்கப்படும். கடன் தொகையை 15 முதல் 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும். தேசிய வங்கியின் மூலம் கடன் வழங்கப்படும். கடன் தொகையின் வட்டியில் 5 சதவீதம் மானியம் வழங்கப்படும். பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர் குறைந்த பட்சம் 270 சதுரஅடியில் வீடு கட்ட வேண்டும். நடுத்தர வருமான பிரிவினர் 430 சதுரஅடியில் வீடு கட்ட வேண்டும். விண்ணப்பிப்பவர்கள், அவரது குடும்பத்தில் உள்ளவர்களின் பெயரில் வீடு இருக்கக் கூடாது. சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள், பட்டா உரிமை பெற்றிருக்க வேண்டும். அரசின் இலவச வீட்டு மனைப்பட்டா பெற்றவர்களும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம். மேலும் விவரத்துக்கு நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் வீட்டு மனைப் பட்டா நகல், வருமானச் சான்று மற்றும் இருப்பிடச் சான்றிதழ்களின் நகல்கள் இணைக்க வேண்டும். செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், வேலூர் வீட்டு வசதிப்பிரிவு, சத்துவாச்சாரி, வேலூர்& என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். காஞ்சிபுரம் தவிர மற்ற தாலுகாவைச் சேர்ந்தவர்கள், செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் பெசன்ட் நகர் கோட்டம். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வணிக வளாகம், 48 எல்.பி. ரோடு, அடையாறு, சென்னை&20. செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் கே.கே.நகர் கோட்டம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வணிக வளாகம் அசோக் நகர், சென்னை 83. ஆகிய முகவரிகளுக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.

Last Updated on Tuesday, 12 January 2010 10:35