Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகர்புற ஏழை மக்களுக்காக வட்டி மானியத்தில் வீடு கட்ட கடனுதவி

Print PDF

தினமலர் 17.02.2010

நகர்புற ஏழை மக்களுக்காக வட்டி மானியத்தில் வீடு கட்ட கடனுதவி

நாகை : நாகை மாவட்டத்தில் மத்திய அரசின் நகர்புற ஏழை மக்களுக்காக வட்டி மானியத்தில் புதியவீடு கட்டுவதற்கும், கட்டிய வீட்டை வாங்குவதற்கும் கடனுதவி வழங்கப்படுகிறது என்று கலெக்டர் (பொ) அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நாகை மாவட்டத்தில் மத்திய அரசின் நகர்புற ஏழை மக்களுக்காக கடனுதவி வட்டி மானியத்திட்டத்தில் ஏற்கனவே மனைப்பட்டா உள்ளவர்களுக்கு புதிய வீடு கட்டுவதற்கு அல்லது கட்டிய வீட்டை வாங்குவதற்கு தேசிய வீட்டு வசதி வங்கி மற்றும் ஹட்கோ மூலம் 1 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் 269 சதுரடி வீடு கட்டுவதற்கு 1 லட்சம் ரூபாய், 431 சதுரடி வீடு கட்ட 1. 60 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்படும். ஆனால் 1 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கான வட்டியை அரசு மானியமாக வழங்கும். அதிகப்படியான வட்டி தொகைக்கு அரசு மானியம் கிடையாது.

இந்த கடன் தொகையை 15 முதல் 20 ஆண்டுகளில் திருப்பி செலுத்தலாம். இத்திட்டத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தில் வீட்டு வசதிக்கடன் பெற மாத வருமானம் பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்காக 3 ஆயிரத்து 300 ரூபாய் வரையும், குறைந்த வருமான வருவாய் உள்ளவர்கள் 3 ஆயிரத்து 300 ரூபாய் முதல் 7 ஆயிரத்து 300 ரூபாய் வரையும் இருக்கவேண்டும்.தகுதியான பயனாளிகள் தங்களது வீட்டு மனைப்பட்டா நகல், குடும்ப அட்டைநகல், தகுதியான சான்றிதழ்களுடன் செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர், தஞ்சாவூர் வீட்டு வசதிப்பிரிவு, புதிய வீட்டு வசதி வாரிய காலனி. தஞ்சாவூர். மற்றும் உதவி பொறியாளர் தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு காலனி, காடம்பாடி, நாகை என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும் மயிலாடுதுறை, வேதாரண்யம், நாகை, சீர்காழி ஆகிய நகராட்சி பகுதிகள், நாகை மாவட்டத்திலுள்ள பேரூராட்சி பகுதிகளில் அரசு வழங்கிய இலவச வீட்டுமனை உள்ளவர்களும், சொந்த வீட்டு மனைப்பட்டா உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.5 ஆண்டுகளுக்கு மேல் அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து தமிழக அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனைப்பட்டா பெற்ற பயனாளிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

Last Updated on Wednesday, 17 February 2010 05:30