Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தஞ்சை மாவட்டத்தில் 24 ஆயிரம் பயனாளிக்கு இலவச பட்டா

Print PDF

தினமலர் 11.03.2010

தஞ்சை மாவட்டத்தில் 24 ஆயிரம் பயனாளிக்கு இலவச பட்டா

கும்பகோணம்: 24 ஆயிரம் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப் பட்டு உள்ளது என கலெக்டர் (பொ) கருணாகரன் கூறினார்.தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு இனங்களின் கீழ் 24 ஆயிரம் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா தலா ஒரு ஏர்ஸ் (இரண்டரை சென்ட்) வீதம் வழங்கப் பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத் துறை, பிற்பட்டோர் நலத் துறை மூலமும் இப்பட்டாக்கள் வழங் கப்பட்டு உள்ளது. அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் நிலங்களை நத்தமாக வகை மாற்றம் செய்து பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றார். ஆர்.டி.., செங்குட்டுவன், தாசில்தார் போஸ் ஆகியோர் உடனிருந்தனர

Last Updated on Thursday, 11 March 2010 06:40