Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Poverty Alleviation

நகர்புற ஏழைகள் வீடு கட்ட மானிய வட்டியில் ரூ.1 லட்சம் வரை கடன்

Print PDF

தினமணி 03.06.2010

நகர்புற ஏழைகள் வீடு கட்ட மானிய வட்டியில் ரூ.1 லட்சம் வரை கடன்

காஞ்சிபுரம், ஜூன் 2: நகர்புற ஏழைகள் வீடு கட்டுவதற்கு 5 சதவீத மானிய வட்டியில் ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்று தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்தார்.

÷காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மானிய வட்டியில் நகர்புற ஏழைகள் வீடு கட்ட கடன் வழங்கும் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பேசியது:

÷நகர்புற ஏழைகள் வீடு கட்ட மானிய வட்டியில் கடன் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் ரூ.1 லட்சம் வரை 5 சதவீத மானிய வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. மேலும் கூடுதல் கடன் தொகை வேண்டுமென்றால் மானிய வட்டி இல்லாமல் எஞ்சிய தொகை வழங்கப்படுகிறது.

÷இத் திட்டத்தில் ரூ.1 லட்சம் வரை கடன் பெறுவோர் ரூ.30 ஆயிரம் வரை மானியம் பெற வாய்ப்புகள் உள்ளன. இத் திட்டத்தில் கடன் பெறுவோர் அவர் பெயரிலோ, மனைவி, குழந்தைகள் பெயரிலோ வீடு இல்லாமல் இருக்க வேண்டும். வீட்டுமனைப் பட்டா உள்ளவர்கள் மட்டுமே இத் திட்டத்தில் கடன் பெற முடியும்.

÷குறைந்த வருவாய் பிரிவினர் (ரூ.5001 முதல் ரூ.10 ஆயிரம் வரை) 40 சதுரமீட்டர் வரை வீடு கட்டுவதற்கு 1.6 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடனை 15 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகளில் செலுத்த வேண்டும். கூடுதல் கடன் தொகை வேண்டுவோர் வங்கி விதிகளின்படி கடன் பெறலாம். அந்தத் தொகைக்கு வட்டி மானியம் கிடையாது.

÷தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், மானிய வட்டி பெறும் பயனாளிகளுக்கு ஒரு பாலமாக இருந்து விண்ணப்பங்களை பெற்று வங்கிகளுக்கு அனுப்பி கடன் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் இத் திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

÷தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகம், வேலூர் வீட்டுவசதி வாரிய பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

÷இக் கூட்டத்துக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு முன்னிலை வகித்தார். நபார்டு வங்கியின் உதவி பொதுமேலாளர் சுதாகர், இந்தியன் வங்கியின் உதவி பொது மேலாளர் வாசுதேவன், மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் வி.பி.தண்டபாணி, வேலூர் தமிழ்நாடு வீட்டுவசதி பிரிவு செயற்பொறியாளர் ஜெ.சாரங்கபாணி உள்பட பலர் பங்கேற்றனர்.

÷இக் கூட்டத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த வங்கியாளர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

வீடு கட்ட மானியத்துடன் கடன் 1100 பேருக்கு வழங்க இலக்கு

Print PDF

தினகரன் 02.06.2010

வீடு கட்ட மானியத்துடன் கடன் 1100 பேருக்கு வழங்க இலக்கு

ராமநாதபுரம், ஜூன் 2: ராமநாதபுரம் மாவட்டத்தில் 1100 நகர்ப்புற மக்கள் சொந்தமாக வீடு கட்ட மானியத்துடன் கடன் வழங்கப்பட உள்ளது.

ராமநாதபுரத்தில் வங்கியாளர்கள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ஹரிகரன் தலைமையில் நடந்தது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தூத்துக்குடி தலைமை மண்டல மேலாளர் திருநாவுக்கரசு, நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர் கண்ணபிரான், முன்னோடி வங்கி மேலாளர் சடகோபால் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள நகர்புறம் மற்றும் பேரூராட்சிகளில் சொந்த வீட்டு மனைப்பட்டா உள்ள பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு வீடுகட்ட ரூ.1 லட்சம் கடனாகவும், மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு ரூ.1.60 லட்சம் கடனாகவும் வழங்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இருபிரிவினருக்கு 5 சதவீதம் வட்டித்தொகை, ரூ.1 லட்சத்திற்கு மட்டும் வங்கிகளிடம் வழங்கப்படும்.

மாவட்டத்தில் 1100 பயனாளிகளுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகளிலிருந்து 203 பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, முன்னோடி வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் 5 சதவீத மானிய வட்டித்தொகையை வங்கிகளுக்கு உடனே வழங்கப்படுவதால், மாவட்டத்திலுள்ள வங்கிகள் இத்திட்டத்தை செயல்படுத்த உறுதுணையாக இருக்க வேண்டும், என்றார்.

ராமநாதபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மூலம், நகராட்சி பகுதியை சேர்ந்த 9பேருக்கு தலா ரூ.20ஆயிரம் வீதம் காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.

 

பிச்சைக்காரர்களை ஒழிக்க சென்னையில் நடவடிக்கை: என்ன செய்யப்போகிறது திருப்பூர் மாநகராட்சி?

Print PDF

தினமலர் 02.06.2010

பிச்சைக்காரர்களை ஒழிக்க சென்னையில் நடவடிக்கை: என்ன செய்யப்போகிறது திருப்பூர் மாநகராட்சி?

திருப்பூர் : சென்னையை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற, சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன் இதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், சென்னை மாநகராட்சியை இவ்விஷயத்தில் பின்பற்றுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னை நகரத்தை அழகுபடுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதான ரோடுகளில் சுவர் விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் பொது சுவர்களில், தமிழர்களின் கலாச்சாரம், புராதானம், பண்பாடுகளை விளக்கும் சித்திரங்கள் தீட்டப் பட்டுள்ளன. மரம் வளர்ப்பு, பூங்காக்கள் மேம்பாடு, மின்சார சேமிப்பு என பல துறைகளிலும் சென்னை மாநகராட்சி முன்னுதாரண நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதுதவிர, வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகளும் தமிழில் இருக்க வேண்மென்ற உத்தரவையும் பிறப்பித்த, செயல்படுத்தி வருகிறது.சமீபத்தில், சென்னையில் பிச்சைக்காரர்களை ஒழிக்க அம்மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, மேயர் சுப்ரமணியன், தனியார் தொண்டு நிறுவனங்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். இதனடிப்படையில், பிச்சைக்காரர்களை தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொள்ள தொண்டு நிறுவனங்கள் சம்மதித்துள்ளன. இதனால், விரைவில் பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக சென்னை மாற உள்ளது.

சென்னையை பின்பற்ற, மதுரை மாநகராட்சி நிர்வாகமும் ஆலோசித்து வருகிறது. திருப்பூரில் உள்ள பிச்சைக்காரர்களை ஒழிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் ஸ்டாண்ட், கோவில்கள் முன் அதிகளவு பிச்சைக்காரர்கள் உள்ளனர். குறிப்பாக, பஸ் ஸ்டாண்டில் குழந்தைகளை வைத்து சாட்டை, மேளம் சகிதம் பிச்சை எடுப்பவர்கள் அதிகளவில் உள்ளனர். திருப்பூருக்கு வரும் வெளிநாட்டவர்கள் அவர்களைப் பார்த்து முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு பிழைப்பு தேடி வருபவர்கள் ஏராளம்.

லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை அளிக்கும் இடமாக திருப்பூர் விளங்குகிறது. திருப்பூரின் தொழில் வளமே, சாதாரண ஊருக்கு மாநகராட்சி அந்தஸ்தும், மாவட்ட அந்தஸ்தையும் பெற்றுத்தந்தது. ஆனால், வேலை செய்ய வாய்ப்பு இருந்தும் சிலர் பிச்சை எடுக்கின்றனர். சிலர் ஊனம் காரணமாக பிச்சை எடுக்கின்றனர். இவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்து, பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற வேண்டியது மாநகராட்சி கடமை. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும். திருப்பூரில் உள்ள தன்னார்வ அமைப்புகள், சேவை நிறுவனங்கள், ஆதரவற்றோர் இல்லங்களை அழைத்துப்பேசி, பிச்சைக் காரர்களை அந்நிறுவனங்களின் பொறுப் பில் எடுத்துக் கொள்ள தேவையான நடவடிக்கையில் இறங்க வேண்டும்.திருப்பூருக்கான மாநகராட்சி அந்தஸ் தை அரசு அளித்து விட்டது. ஆனால், அதைக்காப்பாற்றிக் கொள்வதில் மாநகராட்சி மேயரே அக்கறை காட்ட வேண்டும

 

 


Page 21 of 34