Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Poverty Alleviation

பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு திட்டம் 6ம் தேதி முதல் மாநகராட்சி துவங்குகிறது

Print PDF

தினமலர்    25.05.2010

பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு திட்டம் 6ம் தேதி முதல் மாநகராட்சி துவங்குகிறது

சென்னை : "சென்னை நகரில் சாலைகளில் திரிந்த, மனநோயாளிகளுக்கு மறுவாழ்வு கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டது போல், வரும் 6ம் தேதி முதல் கைக்குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை பிடித்து, மறுவாழ்வு கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று மேயர் சுப்ரமணியன் கூறினார்.நகரில் கைக்குழந்தைகளை வைத்து கொண்டு சாலைகளிலும், சிக்கனலிலும் பிச்சை எடுப்பதை தடுக்க மேயர் சுப்ரமணியன், கமிஷனர் ராஜேஷ் லக்கானி நேற்று ரிப்பன் கட்டடத்தில், தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தினர்.இதில் சமூக நலத்துறை அதிகாரி மற்றும் 30க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.அதை தொடர்ந்து, மேயர் சுப்ரமணியன் கூறியதாவது:கடந்த மூன்றரை ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி, சமூக பிரச்னைகளிலும், அக்கறை கொண்டு செயல்படுகிறது. குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், சாலை ஓரங்களில் திரிந்த சிறுவர்களை பாதுகாக்கவும், நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.முதியோருக்கும் மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. போதை பொருளுக்கு அடிமையானவர் களுக்கு, மறுவாழ்வு கொடுக்க தனிசிகிச்சை மையம் அமைக்கப்படவுள்ளது.சாலைகளில் மனநலம் பாதிக்கப் பட்டவர்களுக்கு, மறுவாழ்வு அளிக்க சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நகரில் தற்போது சாலைகளில், சிக்னல் மற்றும் சாலை ஓரங்களில் கைக்குழந்தைகளை வைத்து, பிச்சை எடுப்பது அதிக அளவில் உள்ளது.சமூக நலத்துறை ஒத்துழைப் புடன், இதுபோல் பிச்சை எடுப்பவர் களை பிடித்து குழந்தைகளை குழந்தை களுக்கான இல்லத்திலும், பெண் களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் வகையில், பாதுகாப்பு மையங் களிலும் சேர்க்கப்படுவர்.இந்த திட்டத்திற்கு, வந்துள்ள தொண்டு நிறுவனங்கள், முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதி அளித்துள்ளன.இதனால் வரும் 5ம் தேதி வரை பிச்சைக்காரர்களுக்கு கெடு கொடுத்து, 6ம் தேதி முதல் தொண்டு நிறுவனம் ஒத்துழைப்புடன், அந்தந்த மண்டல உதவி சுகாதார அதிகாரிகள், பிச்சைக் காரர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.6ம் தேதி முதல் அதிரடியாக 10ம் தேதி வரை பிச்சைக்காரர்கள் பிடிக்கப் பட்டு, குழந்தைகளை குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்திற்கும், பெண் களை பெண்கள் பாதுகாப்பு மையத் திற்கும், முதியோரை முதியோர் இல்லத்திற்கும், மனநலம் பாதிக்கப் பட்டவர்களை மனநல மருத்துவமனைக்கும் அனுப்பி வைப்போம்.இவ்வாறு மேயர் கூறினார்.

 

மத்திய அரசு திட்டத்தில் 1 லட்சம் ஏழைகளுக்கு வீடு கட்ட கடன் சலுகை வீட்டுவசதி வாரிய இயக்குனர் தகவல்

Print PDF

தினகரன்    21.05.2010

மத்திய அரசு திட்டத்தில் 1 லட்சம் ஏழைகளுக்கு வீடு கட்ட கடன் சலுகை வீட்டுவசதி வாரிய இயக்குனர் தகவல்

ஈரோடு, மே 21: ஈரோட்டில் வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குனர் தர்மேந்திர பிரதாப் யாதவ், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

மத்திய அரசின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தில், ஏழை மக்களுக்கு வட்டி சலுகையுடன் கடன் அளிக்கும் திட்டம், கடந்த 2008ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு 27 சதுர மீட்டரில் வீடு கட்ட ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான வரம்பு மாதம் ரூ.5,000. கடனில் 5 சதவீத வட்டி சலுகை வழங்கப்படும்.

குறைந்த வருவாய் பிரிவினருக்கு 39.9 சதுர மீட்டரில் வீடு கட்ட ரூ.1.6 லட்சம் கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான வரம்பு மாதம் ரூ.5,001ல் இருந்து ரூ.10,000 வரை. இதற்கும் வட்டி சலுகை உண்டு. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மனை பட்டா, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை நகல்கள், வருமான சான்றிதழ், விண்ணப்பதாரரின் புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம். இதுவரை தமிழகம் முழுவதும் பெறப்பட்ட 35,000 விண்ணப்பங்களில், 12,000 விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ், தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட வங்கி கடன் பெற்றுத்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குனர் தர்மேந்திர பிரதாப் யாதவ் கூறினார்.

 

ஏழைகளுக்கு வீடுகள் கட்டும் திட்டம்: பயனாளிகள் தேர்வு இன்று துவக்கம்

Print PDF

தினமணி    21.05.2010

ஏழைகளுக்கு வீடுகள் கட்டும் திட்டம்: பயனாளிகள் தேர்வு இன்று துவக்கம்

கோவை, மே 20: ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் திட்டத்துக்கான பயனாளிகள் தேர்வு முகாம் கிழக்கு மண்டலத்தில் வெள்ளிக்கிழமை துவங்குகிறது.

÷இது குறித்து மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

÷ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின்கீழ் நகர்புற ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் திட்டம் கோவை மாநகராட்சியில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் ஏற்கெனவே பல இடங்களில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

மேலும் கூடுதல் எண்ணிக்கையில் பயனாளிகளை தேர்வுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு முகாம், ராமநாதபுரம் மாநகராட்சி ஆண்கள் மேனிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. உதவிப் பொறியாளர் குருவம்மாள் தலைமையில் இம் முகாம் நடைபெறும். இதில் 23, 24-வது வார்டுகளை சேர்ந்த ஏழை பயனாளிகள் பங்கேற்கலாம்.

÷மதுரைவீரன் கோயில் வீதி, 9-வது வார்டு நீலிக்கோனாம்பாளையம் பகுதிகளைத் சேர்ந்த பயனாளிகள், நீலிக்கோனாம்பாளையம் மாநகராட்சி துவக்கப் பள்ளியில் நடைபெறும் முகாமில் பங்கேற்கலாம்.

11-வது வார்டுக்கு உட்பட்ட கமலா குட்டை, கக்கன்நகர் பகுதி பயனாளிகள் கமலா குட்டை மாநகராட்சி சமுதாயநலக்கூடத்தில் நடைபெறும் முகாமில் பங்கேற்கலாம்.

அதேபோல 11-வது வார்டு- தேவேந்திரன் வீதி, 10-வது வார்டு காந்திநகர், மசக்காளிபாளையம் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கான பயனாளிகள் தேர்வு முகாம் வரதராஜபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெறும்.÷7-வது வார்டு- கள்ளிமடை நத்தம், 6-வது வார்டு காமராஜ்நகர் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கான பயனாளிகள் தேர்வு முகாம், கள்ளிமடை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெறும். பயனாளிகளின் பெயரில் பட்டா இருப்பது அவசியம். அதேபோல அந்த இடத்தில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் குடியிருந்ததற்கான இருப்பிடச்சான்று பெற வேண்டும். குறைந்தபட்சம் 268 ச.அடி பரப்பு இருக்க வேண்டும். இப்போது வசிக்கும் வீடு குடிசை அல்லது ஓட்டுவீடாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 


Page 24 of 34