Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Poverty Alleviation

நகர்ப்புற மக்களுக்கு வட்டி: தள்ளுபடியுடன் வீட்டுக்கடன்

Print PDF

தினமலர்    21.05.2010

நகர்ப்புற மக்களுக்கு வட்டி: தள்ளுபடியுடன் வீட்டுக்கடன்

ஈரோடு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் நகர்ப்புற ஏழை மக்களுக்கு வட்டி தள்ளுபடியுடன் கூடிய வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் தொடர்பாக கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள நகராட்சி கமிஷனர்கள், வங்கிகளின் மண்டல மேலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுலகத்தில் நடந்தது.

வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பேசியதாவது: நகர்ப்பகுதியில் வசதிக்கும் ஏழை மக்கள் வீடு கட்டுவதற்காக வட்டி தள்ளுபடியுடன் கூடிய வீட்டு வசதி திட்டத்தை மத்திய அரசு 2008 முதல் செயல்படுத்துகிறது. பொருளாதார நெருக்கடியால் ஆறு மாதங்களுக்கு முன்பு வங்கிகள் மந்த நிலையில் இருந்தன. தற்போது சகஜநிலைக்கு திரும்பிவிட்டன. பட்டா நிலத்தின் அடிப்படையில் ஏழை மக்களுக்கு தள்ளுபடியுடன் கூடிய கடன் வழங்க மத்தியரசு உத்தரவிட்டுள்ளது. கடன் தவணை எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் செலுத்தலாம். கடன் வாங்கும் ஏழை மக்களின் இடத்தின் மதிப்பு, வீடு கட்டும்போது ஒரு லட்சம் ரூபாயாக இருந்தாலும், அடுத்த பத்து ஆண்டுகளில் அதன் மதிப்பு பல மடங்கு உயரும். இதனால், வங்கிகள் கடன் வழங்க தயங்க வேண்டியதில்லை. தமிழகத்தில் டவுன் பஞ்சாயத்துகளையும் சேர்த்து மொத்தம் 45 சதவீதம் வரை நகர்ப்பகுதி உள்ளது. இத்திட்டம் மூலம் டவுன் பஞ்சாயத்து மக்களும் பயன்பெறலாம்.

தமிழகம் அனைத்து திட்டங்களிலும் முன்னிலையில் உள்ளது. ஆனால், இத்திட்டத்தின் கீழ் 34 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டும், இதுவரை எவருக்கும் கடன் வழங்கவில்லை. பட்டா உள்ளவர்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். வங்கிகள் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் தொகை வழங்கலாம். இத்திட்டத்தின் கீழ் கடன் பெற, பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு குறைந்தபட்சம் 27 சதுர மீட்டர் பரப்பில் நிலம் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருவாய் 5,000 ரூபாயாக இருக்க வேண்டும். கடன் தொகை ஒரு லட்சம் ரூபாய்க்கு ஐந்து சதவீத வட்டி சலுகை வழங்கப்படும். குறைந்த வருவாய் பிரிவினருக்கு 5001 ரூபாயிலிருந்து பத்து ஆயிரம் ரூபாய் வரை மாத வருவாய் உள்ளவர்களுக்கு, கடன் தொகையில் ஒரு லட்சத்துக்கு ஐந்து சதவீதம் வட்டி சலுகை வழங்கப்படும்.

திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் வீட்டு மனைக்கான பட்டா, ரேஷன் கார்டு நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், வருமான சான்றிதழ், ஃபோட்டோ வேண்டும். ஒருவரின் பூர்வீகத்தை கூறுவது அவர் குடியிருக்கு ஊரில் உள்ள வீடுதான். வீடு அத்யாவசியமானது. வங்கியாளர்கள் தயங்காமல் இத்திட்டத்தில் கடன் வழங்க வேண்டும். கடன் திரும்ப செலுத்துவது குறித்து வங்கியாளர்கள் கவலைப்பட வேண்டாம். 2008ல் இத்திட்டம் அறிவித்தபோதும் விழிப்புணர்வு இல்லாததால், தமிழகத்தில் பின்தங்கியுள்ளது. ஒரு லட்சம் ரூபாய் கடன் பெறுவோருக்கு 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை மானியம் கிடைக்கும். இத்திட்டத்தை செயல்படுத்துவதில் எவ்வித குறியீடும் இல்லை. எத்தனை பேர் விண்ணப்பித்தாலும் அனைவருக்கும் வழங்கலாம். இவ்வாறு அவர் பேசினார். சென்னை வீட்டுவசதி வாரிய தொடர்பு அலுவலர் கிறிஸ்டோபர், மாவட்ட கலெக்டர் சுடலைக்கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

 

நகர்ப்புற ஏழை மக்கள் வீடு கட்ட வட்டி இல்லாமல் ரூ.1 லட்சம் கடனுதவி

Print PDF

தினமணி     20.05.2010

நகர்ப்புற ஏழை மக்கள் வீடு கட்ட வட்டி இல்லாமல் ரூ.1 லட்சம் கடனுதவி

ஈரோடு, மே 19: நகர்ப்புற ஏழை மக்கள் வீடு கட்டுவதற்கு வட்டி இல்லாமல் ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய நிர்வாக இயக்குநர் தர்மேந்திர பிரதாப்யாதவ் தெரிவித்தார்.

÷தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின், ஈரோடு வீட்டுவசதிப் பிரிவு சார்பில், நகர்ப்புற ஏழை மக்களுக்கான வீட்டு வசதித் திட்ட செயல்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆர்.சுடலைக்கண்ணன் தலைமை வகித்தார்.

÷இதில் வீட்டுவசதி வாரிய நிர்வாக இயக்குநர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பேசியது: தமிழகத்தில் நகர்ப்புற ஏழைகளுக்கான, வட்டி தள்ளுபடியுடன் கூடிய வீட்டு வசதித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தின்கீழ், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கப்பட உள்ளது. இவர்களின் மாத வருவாய் வரம்பு ரூ.5 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். இவர்களுக்கு 5 சத வட்டிச் சலுகையும் வழங்கப்படும்.

÷இது போல குறைந்த வருவாய் பிரிவினர் வீடு கட்டுவதற்கு ரூ.1.60 லட்சம் கடனுதவி வழங்கப்படும். இவர்களின் மாத வருமானம் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். இவர்களுக்கும் 5 சத வட்டிச் சலுகை வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் இதுவரை 35 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 12 ஆயிரம் மனுக்கள் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள என்றார்.

÷ஆலோசனைக் கூட்டத்தில் வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் எஸ்.விஜயகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் சீனிவாசன் மற்றும் ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த நகராட்சி ஆணையர்கள், வங்கி மேலாளர்கள், பேரூராட்சி அதிகாரிகள், வீட்டுவசதி வாரியத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 20 May 2010 09:32
 

குற்றாலம் ஐந்தருவியில் கடைகள் அகற்றம்

Print PDF

தினமணி     18.05.2010

குற்றாலம் ஐந்தருவியில் கடைகள் அகற்றம்

தென்காசி, மே 17: குற்றாலம் ஐந்தருவியில் பெண்கள் குளிக்கச் செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த கடைகளை பேரூராட்சி நிர்வாகம் திங்கள்கிழமை அகற்றியது. இதற்கு கோயில் நிர்வாகம் மற்றும் கடை உரிமையாளர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

குற்றாலம் ஐந்தருவியில் ஐந்தருவி அய்யனார் சாஸ்தா கோயில் உள்ளது. இப் பகுதியில் கோயில் நிர்வாகம் சார்பில் கடைகள் ஏலம் விடப்பட்டு நடத்தப்பட்டு வந்தன. ஆனால், இந்த ஆண்டு அப் பகுதியில் கடைகள் ஏலம் விடப்படவில்லை.

அப் பகுதியில் உள்ள 34 சென்ட் நிலம் கோயிலுக்குச் சொந்தமானது என கோயில் நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது என பேரூராட்சி நிர்வாகத்தினர் நீதிமன்றத்தில் வாதாடினர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, கோயில் நிர்வாகம் தொடுத்திருந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், ஐந்தருவி பகுதியில் கோயில் நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்பட்டு நடத்தப்பட்டு வந்த கடைகளை மே 16ஆம் தேதிக்குள் அகற்றுமாறு கடையின் உரிமையாளர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை தென்காசி கோட்டாட்சியர் இல.மூர்த்தி முன்னிலையில், குற்றாலம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி ராஜையா தலைமையில் பேரூராட்சிப் பணியாளர்கள் கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு கடைகளின் உரிமையாளர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேல்முறையீடு செய்ய காலஅவகாசம் இருப்பதால் தற்போது கடைகளை இடிக்கக் கூடாது என கோட்டாட்சியரிடம் கோயில் நிர்வாக அதிகாரி வெங்கடேஷ் முறையீடு செய்தார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் கடையின் உரிமையாளர்களும், கோயில் நிர்வாகத்தினரும் முறையிடுமாறு கோட்டாட்சியர் தெரிவித்தார்.

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. தென்காசி டி.எஸ்.பி. ஸ்டாலின், குற்றாலம் ஆய்வாளர் விஜயகுமார் அங்கு வந்தனர். போலீஸôரும் குவிக்கப்பட்டனர். இதையடுத்து கடைகள் அகற்றப்பட்டன. அப் பகுதியில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்படும் என பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 25 of 34