Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Poverty Alleviation

ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தரும் திட்டம்: ரூ. 32 ஆயிரம் கூடுதலாக ஒதுக்க உத்தரவு

Print PDF

தினமணி 13.04.2010

ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தரும் திட்டம்: ரூ. 32 ஆயிரம் கூடுதலாக ஒதுக்க உத்தரவு

கோவை, ஏப். 12: ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் ரூ. 32 ஆயிரம் கூடுதலாக ஒதுக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

÷கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் திட்டத்தின் கீழ், 48 பயனாளிகளுக்கு தலா ரூ. 28 ஆயிரத்து 350}க்கான காசோலையை துணை மேயர் நா.கார்த்திக் வழங்கினார்.

÷நிகழ்ச்சிக்கு கிழக்கு மண்டல தலைவர் எஸ்.எம்.சாமி தலைமை வகித்தார். மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் வெ.ந.உதயக்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்குப் பின் துணை மேயர் கார்த்திக் கூறியது:

÷ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ், நகர்ப்புற ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் திட்டம், கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

÷பட்டா வைத்திருக்கும் பயனாளிகளுக்கு அதே இடத்திலும் தனி வீடு கட்டித் தரப்படும். நீர்நிலை புறம்போக்கில் வசிப்பவர்களுக்கு அம்மன்குளம், உக்கடத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கப்படும்.

÷இதற்காக ஒவ்வொரு பயனாளிக்கும் ரூ. ஒரு லட்சத்து 12 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. வீடு கட்ட இத்தொகை போதுமானதாக இல்லை என்பதால், கூடுதலாக ரூ. 32 ஆயிரம் ஒதுக்க கடந்த மாதம் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது, என்றார்.

Last Updated on Tuesday, 13 April 2010 10:04
 

ஏழைகளுக்கு ஊக்க உதவியுடன் வீட்டு வசதி கடன் வழங்கல்

Print PDF

தினமலர் 15.03.2010

ஏழைகளுக்கு ஊக்க உதவியுடன் வீட்டு வசதி கடன் வழங்கல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகர்புறம் மற்றும் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் வசிக்கும் ஏழைகளுக்கு வட்டி ஊக்க உதவியுடன் வீட்டுவசதி கடன் வழங்கப்படுகிறது.கலெக்டர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை:மத்திய அரசு சார்பில் நகர் பகுதி மற்றும் டவுன் பஞ்சாயத்து பகுதி ஏழை மக்களுக்கு வட்டி ஊக்க உதவியுடன் கூடிய வீட்டு வசதி கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் குறைந்த வருவாய் பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் நகரம் மற்றும் டவுன் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனக்கென்று சொந்த வீடு கட்டுவதற்கு தேவையான வட்டி ஊக்க உதவியுடனான கூடிய வீட்டு வசதி கடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வழங்கப்படும்.இந்த திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரின் மாத வருமானம் 5,000 ரூபாய்க்கு குறையாமலும், குறைந்த வருவாய் பிரிவினருக்கு மாத வருமானம் 5,000 முதல் 10,000 ஆயிரம் வரையில் இருக்க வேண்டும்.

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் 25 சதுர மீட்டர் பரப்புள்ள கொண்ட வீடு கட்ட ஒரு லட்ச ரூபாய் வரையிலும், குறைந்த வருவாய் பிரிவினர் 40 சதுர மீட்டர் பரப்புள்ள வீடு கட்டுவதற்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரையிலும் கடன் பெறலாம்.கடன் பெற விரும்புவோர் நிலப்பட்டா மனுதாரரின் பெயரில் இருக்க வேண்டும். கடன்பெற நிலம் நகரம் மற்றும் டவுன் பஞ்சாயத்து பகுதியில் இருத்தல் வேண்டும். வருமான சான்றிதழ் தலைமையிட தாசில்தாரிடம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் இருப்பிட சான்றிதழ், ரேஷன் கார்டு நகல் மற்றும் கலர் ஃபோட்டோவை இணைக்க வேண்டும்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகரம் மற்றும் டவுன் பஞ்சாயத்து பகுதியில் வசிப்போர் இந்த கடனை பெற செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி ஓசூர் வீட்டு வசதி பிரிவு ஆகியோரிடம் விண்ணப்பம் அளித்து கடன் பெறலாம்.

Last Updated on Monday, 15 March 2010 07:33
 

வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மாணவிகளுக்கு இலவச நாப்கின்: ஆட்சியர்

Print PDF

தினமணி 12.03.2010

வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மாணவிகளுக்கு இலவச நாப்கின்: ஆட்சியர்

கிருஷ்ணகிரி, மார்ச் 11: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் இன்னும் 6 மாதத்துக்குள் வழங்கப்படும் எனமாவட்ட ஆட்சியர் வே..சண்முகம் கூறினார்.

மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பள்ளிகளின் சுத்தம், சுகாதார கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் யுனிசெப்பின் அனைத்துத் திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சுகாதாரத்தை கடைபிடிக்கும் 94 பள்ளிகளுக்கு 10 ஸ்டார் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பெண் கல்வி மேம்பாடு சிறப்புத் திட்டத்தின் கீழ் கெலமங்கலம், வேப்பனப்பள்ளி, சூளகிரி ஒன்றியங்களில் உள்ள 87 பள்ளிகளில், ஒரு பள்ளிக்கு 2 ஆசிரியர்கள் வீதம் 250 ஆசிரியர்களுக்கு சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 7 மற்றும் 8-ம் வகுப்பு பயிலும் 5,500 மாணவியருக்கு இப்பயிற்சி வழங்கப்பட்டது.

தற்போது 50 பள்ளிகளில் நாப்கின் வெண்டிங் மிஷின்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் 6 மாத காலத்திற்குள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மாணவியர்களுக்கு இலவசமாக நாப்கின்கள் வழங்கப்பட உள்ளன. மகளிக் குழுக்கள் தயாரிக்கும் நாப்கின்கள், பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு மானிய விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது என்றார் அவர்.

இக்கூட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் நடைபெறும் கட்டுமானப்பணிகள், பள்ளி செல்லாக் குழந்தைகளின் விவரம், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கல்வி மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி, உண்டு உறைவிடப்பள்ளி, தேசிய பெண் கல்வி மேம்பாட்டு சிறப்புத் திட்டம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. முதன்மைக் கல்வி அலுவலர் எம்.பாஸ்கரன், அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் சேமலை, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சுப்ரமணியன், யுனிசெப் ஒருங்கிணைப்பாளர் லேலுசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Last Updated on Friday, 12 March 2010 10:27
 


Page 27 of 34