Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Poverty Alleviation

ஏழைகளுக்கு வீடு: தமிழகம் முதலிடம் :ஸ்டாலின் பெருமிதம்

Print PDF

தினமலர் 12.02.2010

ஏழைகளுக்கு வீடு: தமிழகம் முதலிடம் :ஸ்டாலின் பெருமிதம்

தாம்பரம் : "ஏழைகளுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்தித் தருவதில் நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது.பிற மாநில முதல்வர்கள் பாராட்டும் வகையில் தமிழகத்தில் சிறப்பான திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன' என்று, துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சென்னை மாநகரை மேம்படுத்தும் பொருட்டு, ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்பு திட்டத்தின் கீழ், சென்னை மாநகர குடிசைவாழ் மக்களுக்காக பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் 1,113.33 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 23 ஆயிரத்து 864 அடுக்குமாடி குடியிருப்புகள்; சுனாமி ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக சென்னை மெரீனா திட்டப்பகுதியில் 132. 53 கோடி ரூபாய் செலவில் 2,280 அடுக்குமாடி குடியிருப்புகள்; 1.26 கோடி ரூபாய் செலவில் செம்மஞ்சேரி புதிய பஸ் நிலையம் ஆகிய திட்டங்களின் துவக்க விழா சென்னையை அடுத்த செம்மஞ் சேரியில் நேற்று நடந்தது.

இவ்விழாவில், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை செயலர் அஷாக் டோங்ரே வரவேற்றார்.திட்டங்களை துவக்கி வைத்து துணை முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,"உணவு, உடை, இருப்பிடம் இந்த மூன்றும் இருந்தால் தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்பதை அறிந்து, புரிந்து அதற்கேற்ற வகையில் செயல்பட்டு வரும் ஆட்சி தான் தி.மு.., ஆட்சி.

முதல்வர் கருணாநிதி, கடந்த 1971ம் ஆண்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கினார். இதன் தொடர்ச்சியாக, பல அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.இந்த திட்டம் நகர்புறத்தில் மட்டுமே பயன்படக்கூடாது என் பதை கருத்தில் கொண்டு கிராமப் புறங்களிலும் தொகுப்பு வீடுகள் என்ற திட்டம் துவக்கப்பட்டு அதுவும் தொடர்ந்து நடந்து வருகிறது.தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் துவக்கப்பட்டு 36 ஆண்டுகளில், 77 ஆயிரத்து 627 வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. ஆனால், இந்த ஐந்து வருடத்தில் 82 ஆயிரம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு 42 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.தற்போது, 26 ஆயிரத்து 144 வீடுகள் கட்டப்பட்டவுள்ளன. ஏழைகளுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்தித் தருவதில் நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது.மற்ற மாநில முதல்வர்கள் பாராட்டும் வகையில் தமிழகத்தில் சிறப்பான திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன' என்றார்.விழாவில், அமைச்சர்கள் சுப. தங்கவேலன், அன்பரசன், சென்னை மேயர் சுப்ரமணியம், தாம்பரம் எம்.எல்.., எஸ்.ஆர். ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Last Updated on Friday, 12 February 2010 06:37
 

ஏழை, நடுத்தர மக்கள் வீடு கட்ட கடன்

Print PDF

தினகரன் 12.01.2010

ஏழை, நடுத்தர மக்கள் வீடு கட்ட கடன்

காஞ்சிபுரம் : கலெக்டர் சந்தோஷ் மிஸ்ரா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: Ôகாஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற ஏழை மக்களுக்கு மானியத்தில் வீடு கட்ட கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் நகர எல்லைக்குள் வீடு கட்டுவதற்கும் வீடு வாங்குவதற்கும் மாநகராட்சி நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

மாத வருமானம் ரூ.3,300 இருப்பவர்கள் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள் என்றும் ரூ.3.301 முதல் ரூ 7.300 வரை இருப்பவர்கள் நடுத்தர வருமானம் உடையவர்கள் என்றும் 2 வகையாகப் பிரிக்கப்படும்.

நலிவுற்ற பிரிவினருக்கு ரூ.1 லட்சமும் நடுத்தர வருமான பிரிவினருக்கு ரூ.1 லட்சத்து 60,000மும் கடன் வழங்கப்படும். கடன் தொகையை 15 முதல் 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும். தேசிய வங்கியின் மூலம் கடன் வழங்கப்படும். கடன் தொகையின் வட்டியில் 5 சதவீதம் மானியம் வழங்கப்படும். பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர் குறைந்த பட்சம் 270 சதுரஅடியில் வீடு கட்ட வேண்டும். நடுத்தர வருமான பிரிவினர் 430 சதுரஅடியில் வீடு கட்ட வேண்டும். விண்ணப்பிப்பவர்கள், அவரது குடும்பத்தில் உள்ளவர்களின் பெயரில் வீடு இருக்கக் கூடாது. சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள், பட்டா உரிமை பெற்றிருக்க வேண்டும். அரசின் இலவச வீட்டு மனைப்பட்டா பெற்றவர்களும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம். மேலும் விவரத்துக்கு நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் வீட்டு மனைப் பட்டா நகல், வருமானச் சான்று மற்றும் இருப்பிடச் சான்றிதழ்களின் நகல்கள் இணைக்க வேண்டும். செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், வேலூர் வீட்டு வசதிப்பிரிவு, சத்துவாச்சாரி, வேலூர்& என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். காஞ்சிபுரம் தவிர மற்ற தாலுகாவைச் சேர்ந்தவர்கள், செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் பெசன்ட் நகர் கோட்டம். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வணிக வளாகம், 48 எல்.பி. ரோடு, அடையாறு, சென்னை&20. செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் கே.கே.நகர் கோட்டம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வணிக வளாகம் அசோக் நகர், சென்னை 83. ஆகிய முகவரிகளுக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.

Last Updated on Tuesday, 12 January 2010 10:35
 

நகர்புற ஏழை மக்களுக்கு வீடு கட்ட கடனுதவி

Print PDF
தினமணி 12.01.2010

நகர்புற ஏழை மக்களுக்கு வீடு கட்ட கடனுதவி

காஞ்சிபுரம்
, ஜன. 11: நகர்புற ஏழை மக்கள் மானிய வட்டியில் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் கடனுதவித் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கே.மிஸ்ரா வெளியிட்ட அறிக்கை:

இத் திட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும், மாத வருமானம் ரூ.3300-வரை பெறும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினரும், மாத வருமானம் ரூ.3301 முதல் ரூ.7300 வரை பெறும் நடுத்தர வருமான பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்.

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு ரூ.1 லட்சமும், நடுத்தர வருமான பிரிவினருக்கு ரூ.1.60 லட்சமும் கடனாக வழங்கப்படும். இக்கடன் தொகை தேசிய வங்கிகள் மூலம் பெற்றுத் தரப்படும். கடனை 15 முதல் 20 ஆண்டு கால இடைவெளியில் திருப்பி செலுத்த வேண்டும். கூடுதலாக கடன் தொகை தேவைப்பட்டால் வழக்கமான வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும்.

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு கட்டப்படும் வீடுகள் குறைந்தபட்சம் 25 (270 சதுர அடி) சதுர மீட்டர் பரப்பளவும், நடுத்த பிரிவினர் 40 சதுர மீட்டர் (430 சதுர அடி) இருக்க வேண்டும்.

தம்முடைய பெயரிலோ, தனது மனைவியின் பெயரிலோ (அல்லது) குடும்ப உறுப்பினர் பெயரிலோ சொந்தமாக வீடு இல்லாதவர்கள் மட்டும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் அதற்குரிய பட்டா உரிமையை பெற்றிருக்க வேண்டும். அரசின் மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றுள்ளவர்களும் இத் திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

மேலும் விவரங்கள் அறிய அருகிலுள்ள நகராட்சி, பேரூராட்சி அலுவலர்களை அணுகலாம். காஞ்சிபுரம் வட்டத்தில் வசிப்பவர்கள் தங்கள் விண்ணப்பத்துடன், தங்கள் மனைப்பட்டா நகல், வருமானச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று நகல்களுடன் வேலூர் வீட்டு வசதி பிரிவு நிர்வாக அலுவலரை தொடர்பு கொள்ளலாம். மற்றவர்கள் சென்னை அடையாறு, அசோக் நகர் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய வணிக வளாக செயற்பொறியாளர் அலுவலர்களை அணுகலாம் என்றார்.

Last Updated on Tuesday, 12 January 2010 09:43
 


Page 29 of 34