Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வடவள்ளியில் ஆக்கிரமிப்பில் இருந்த 30 வீடுகள், கடைகள் அகற்றம்

Print PDF

தினமணி 05.05.2010

வடவள்ளியில் ஆக்கிரமிப்பில் இருந்த 30 வீடுகள், கடைகள் அகற்றம்

கோவை, மே 4: வடவள்ளியில் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த 30 வீடுகள் மற்றும் கடைகளை பேரூராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீரென அகற்றினர்.

÷வடவள்ளி சந்தைப்பேட்டைக்குப் பின்புறம் பேரூராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு சிலர் ஆக்கிரமித்து வீடு மற்றும் கடைகளை கட்டியிருந்தனர். இந்த இடத்தை மீட்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. ÷இதையடுத்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.

இருப்பினும் வீடுகள் மற்றும் கடைகளை அகற்ற ஆக்கிரமிப்பாளர்கள் முன்வரவில்லை. இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை சம்பவ இடத்துக்கு சென்ற பேரூராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திர உதவியுடன் ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கடைகளை அகற்றினர் (படம்).

÷அப்போது சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் போலீஸ் பாதுகாப்புடன் அவை அகற்றப்பட்டன. 30 வீடுகள் மற்றும் 5 கடைகள் அகற்றப்பட்டதாக, பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.