தினமணி 12.05.2010
போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நாமக்கல், மே 11: நாமக்கல் நகரில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. நாமக்கல் நகரில் சேந்தமங்கலம் சாலை, மேட்டுத்தெரு, பேருந்துநிலையம், பிரதான சாலை, கடைவீதி ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஆக்கிரமிப்பு உள்ள பகுதிகளை கண்டறிந்து அவற்றை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இதன்படி, நாமக்கல் நகராட்சி அலுவலர்கள், வருவாய்த்துறையினர், போலீஸôர் ஒன்றிணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். கடைகளின் வெளியே அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை, சாலையின் மீது அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் தளம், கொட்டகை, விளம்பர பதாகைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. ஜேசிபி எந்திரம் மூலமும் ஆக்கிரமிப்புகள் இடித்து தள்ளப்பட்டன. இச் சம்பவத்தால் நகரில் பரபரப்பு காணப்பட்டது