தினமணி 14.05.2010
பழனியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
பழனி, மே 13: பழனியில் காந்தி சாலை, ஆர்.எப். சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் புதன்கிழமை நகராட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு வியாபாரிகள் ஆட்சேபணை தெரிவித்ததால் நிறுத்தப்பட்டது.
எனவே வியாழக்கிழமை நகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொண்டனர். இதற்குப் பல வியாபாரிகள் ஆட்சேபணை தெரிவித்தனர். இருப்பினும் போலீஸôர் உதவியுடன் நகராட்சி அதிகாரிகள் காந்தி சாலையில் மார்க்கெட் முன்பு சுமார் 20 அடி வரை நீட்டப்பட்டிருந்த கடைகள், மேற்கூரைகள் ஆகியவற்றைஅகற்றினர்.
மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் நகராட்சி லாரியில் ஏற்றிச் செல்லப்பட்டது. தொடர்ந்து ஆர்.எப். சாலையிலும் சுறா பட பிளெக்ஸ் போர்டு இயந்திரத்தைக் கொண்டு கிழிக்கப்பட்டது. மின்வாரிய அலுவலகம் அருகேயும் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.