Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஐந்தருவி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

Print PDF

தினகரன்        18.05.2010

ஐந்தருவி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

தென்காசி, மே. 18: ஐந்தருவி பகுதியில் ஆக்கிரமிப்பு கடை கள் அகற்றப்பட்டன. அப் போது வியாபாரிகள்&அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

ஐந்தருவியில் பெண்கள் குளிக்கச்செல்லும் பகுதியில் உள்ள ஒரு சில கடைகளின் உரிமைதொடர்பாக குற்றாலநாதர் கோயில் மற்றும் பேரூ ராட்சி நிர்வாகத்திற்கு இடை யே நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு சாதகமாக இதில் தீர்ப்பு கிடைத்தது. இதனையடுத்து பேரூராட்சி நிர்வாக அதிகாரி ராஜையாஅங்கு வைக்கப்பட் டுள்ள கடைகளை 16ம் தேதிக் குள் காலி செய்யுமாறு அதன் உரிமையாளர்களுக்கு 2 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அவர்கள் காலி செய்யவில்லை.

இதனையடுத்து நேற்று தென்காசி கோட்டாட்சியர் மூர்த்தி, டி.எஸ்.பி. ஸ்டாலின், குற்றாலம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், பேரூராட்சி நிர்வாக அதிகாரி ராஜையா ஆகியோர் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது அங்கு திரண்டு கடை உரிமையாளர்கள் மற் றும் அவர்களது வழக்கறிஞர் கார்த்திக் ஆகியோர் எங்களுக்கு தாமதமாக நோட்டீஸ் கிடைத்தது. இது தொடர்பாக நாங்கள் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவிருக்கிறோம். குறைந்த கால அவகாசத்தில் கடைகளை அகற்றக்கூடாது என்று கூறி ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதற்கு பேரூராட்சி நிர்வாக அதிகாரி நீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமாக கடந்த பிப்ரவரி மாதமே தீர்ப்பு கிடைத்துள்ளது. எனவே சட்டப்படி ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறோம் என்றார். இதையடுத்து கோட்டாட்சியர் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற இடையூறு விளைவிக்க கூடாது. இது தொடர்பாக உங்களுக்கு ஆட்சேபம் இருந்தால் நீதிமன்றம் சென்று பரிகாரம் தேடிக் கொள்ளலாம் என்று கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.