Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மே29ல் ஆக்கிரமிப்புகள் அகற்ற முடிவு

Print PDF

தினமலர்     20.05.2010

மே29ல் ஆக்கிரமிப்புகள் அகற்ற முடிவு

கீழக்கரை: கீழக்கரை நகராட்சியில் மே 29ல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என கமிஷனர் சுந்தரம் கூறினார். அவர் கூறியதாவது:கீழக்கரை நகராட்சி பகுதியில் வள்ளல் சீதக்காதி சாலை, இந்து பஜார் உட்பட பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இதனால் மக்கள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். இதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் மே 29ல் ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள. குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் தாங்களாகவே முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நகராட்சியால் அகற்றப் படும் ஆக்கிரமிப்புக்கான செலவுகளை சம்பந்தப் பட்ட நிறுவன உரிமையாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், என்றார். நகராட்சி தலைவர் பஷீர் அகமது உடன் இருந்தார்.