Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆக்கிரமிப்பு வீடுகள் மாநகராட்சி அகற்றம்

Print PDF

தினமலர்    21.05.2010

ஆக்கிரமிப்பு வீடுகள் மாநகராட்சி அகற்றம்

திருச்சி: திருவானைக்காவலில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 15 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

திருச்சி, திருவானைக்காவல், நெல்சன் சாலையில் சிலர் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வீடுகள் கட்டி 20 ஆண்டுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனர். ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றம்படி மாநகராட்சியில் இருந்து பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வீடுகளை அகற்றாமல் இருந்தனர். இதையடுத்து, நேற்று காலை மாநகராட்சி செயற்பொறியாளர் அருணாச்சலம் தலைமையில், ஸ்ரீரங்கம் உதவி செயற்பொறியாளர் நாதன், இளநிலைபொறியாளர்கள் லட்சுமணன், மூர்த்தி, வேல்முருகன், ரவீந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நெல்சன் சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 15க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் இயந்திரம் மூலம் வீடுகள் இடிக்கப்பட்டன. பிரச்னைகளை தவிர்க்க ஸ்ரீரங்கம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.