தினமலர் 24.05.2010
ஆக்கிரமிப்பாளர்களிடம் மீட்கப்பட்ட பூங்கா
போடி: போடி சூர்யா நகரில் நகராட்சிக்கு சொந்தமான பூங்காவை தனிநபர்கள் ஆக்ரமிக்க முயன்ற போது, போடி நகராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்தி தளவாட பொருட்களை பறிமுதல் செய்தது. போடி பரமசிவன் கோயில் ரோட்டில் அமைந் துள்ள சூர்யா நகரில் நகராட்சிக்காக ஒதுக்கப்பட்ட பூங்கா உள்ளது.
பூங்கா அமைக்க நகராட்சி நிர்வாகம் தாமதம் செய்து வந்த நிலையில் தனிநபர்கள் சிலர் குடிசைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்ய முயன்றனர். நகராட்சிகமிஷனர் சரவணக்குமார் தலைமையில் பணியாளர்கள் சென்று ஆக்கிரமிப்பை தடுத்து, ஆக்கிரமிப்பாளர்கள் கொண்டு வந்த தளவாடப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.