Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

போக்குவரத்துக்கு இடையூறு பஸ் நிலைய கங்கனா மண்டபம் இடிக்கப்படும்

Print PDF

தினகரன்    25.05.2010

போக்குவரத்துக்கு இடையூறு பஸ் நிலைய கங்கனா மண்டபம் இடிக்கப்படும்

வாலாஜா, மே 25: வாலாஜா பஸ்நிலையத்தில் உள்ள கங்கனா மண்டபத்தை இடிப்பது என நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வாலாஜா நகராட்சி மன்றக்கூட்டம் அதன் தலைவர் நித்தியானந்தம் தலைமையில் நேற்றுமாலை நடந்தது. துணைத் தலைவர் வள்ளியம்மாள், பொறியாளர் ஆனந்தஜோதி மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் வாலாஜா பஸ் நிலையத்தில் உள்ள பழமையான கங்கனா மண்டபம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். அப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.

இதுகுறித்து மண்டப நிர்வாகத்தினர், மண்டபத்தை இடித்துக்கொள்ளலாம் என கடிதம் கொடுத்துள்ளனர். அதன்பேரில் இந்த மண்டபத்தை இடிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

கடந்த 2003ம் ஆண்டிலிருந்து நகராட்சிக்கு சொந்தமான 2 கடைகள் டாஸ்மாக் குடோனுக்காக கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை வாடகை பணம் தரவில்லை. இது சம்பந்தமாக பல முறை கடிதம் அனுப்பியும், எந்தவித பதிலும் வரவில்லை.

எனவே, வாடகை பாக்கி தொகை ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்தை வசூலிக்கவும், அந்த கடையை மீண்டும் நகராட்சியிடம் ஒப்படைக்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.