Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தினகரன் செய்தி எதிரொலி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

Print PDF

தினகரன் 03.06.2010

தினகரன் செய்தி எதிரொலி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

கரூர், ஜூன் 3: தினகரன் செய்தி எதிரொலியால் நகராட்சி அதிகாரிகள் கரூர் பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

கரூர் பஸ்நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகள் நெரிசல் அதிகமாகி பய ணிகள் நிற்க கூட இட மின்றி அவதிப்பட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண் டும், நிற்பதற்கும், அமருவதற்கும் வசதி செய்ய வேண் டும் என பயணிகள் கோரி க்கை விடுத்தனர்.

இந்நிலையில் கரூர் நகராட்சி ஆணையராக உமாபதி பொறுப்பேற்றார். இவர் கடந்த 15நாட்களுக்கு முன் னர் பஸ்நிலையத்தில் உள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றினார். பயணிகளுக்கான இடத் தில் கடை வைத்தால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரி க்கை விடுத்தனர்.

இந்நிலையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைக்க தொடங்கின. இதுகுறித்த செய்தி கடந்த 1ம்தேதி தினகரனில் வெளியானது.

இதையடுத்து நகரமைப்பு அலுவலர் ஜானகிராமன் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் நேற்று பஸ்நிலையத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பயணிகள் நடக்கும் பாதை விசாலமாக மாற்றப்பட்டது.

பஸ்நிலையத்திற்குள் உள்ள சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள துண்டுபிரசுரங்களை அகற்றி சுகாதார பணியாளர்கள் சுத்தம் செய்தனர்.

அனுமதியற்ற தட்டிபோர்டுகளை அகற்றினர். தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். நடைபாதையில் வியாபாரம் செய்தால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என நகராட்சி ஆணையர் உமாபதி தெரிவித்தார்.