தினமலர் 11.06.2010
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மதுரை : மதுரை வெங்கலக்கடைத் தெரு 1 முதல் 5 வரை சாலையோரங்களில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருந்தன. வெங்காயம், வெள்ளைப்பூண்டு மற்றும் வாசனை திரவியங்கள் விற்பவர்கள், சாலையை ஆக்கிரமித்திருந்தனர். இது பற்றி மாநகராட்சிக்கு ஏராளமான புகார்கள் வந்தன.நேற்று நகரமைப்பு அலுவலர்கள் நல்லதம்பி, ஜாகீர் உசேன் மற்றும் ஊழியர்கள், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பொருட்கள் மாநகராட்சி ஸ்டோர் ரூமில் ஒப்படைக்கப் பட்டன.