தினகரன் 15.06.2010
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
கோபி, ஜூன் 15: கோபி பஸ்நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட கடை வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த கடைகளுக்கு முன்புறம் ஒதுக்கப்பட்ட இடத்தை விட கூடுதலான இடத்தை பல கடைக்காரர்கள் ஆக்கிரமித்து இருந்தனர்.இந்த ஆக்கிரமிப்பை அகற்ற கடந்த 10 ம் தேதி நகராட்சி சார்பில் காலஅவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஆக்கிரமிப்பை கடைக்காரர்கள் அகற்றாததால் நேற்று மதியம் அதிகாரிகள் திடீரென அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
தாசில்தார் பன்னீர்செல்வம் தலைமையில் நகராட்சி ஆணையர் குப்பமுத்து, சுகாதார அலுவலர் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் வெங்கடேஸ்வரன் உள்பட வருவாய்த்துறை ஊழியர்கள் பஸ நிலைய கடைகளின் ஆக்கிரமிப்பை அகற்றினர். அனுமதியில்லாத இடத்தில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களையும் அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.