தினகரன் 15.06.2010
தெப்பக்குளம், பாலக்கரையில் ஆக்கிரமிப்புகள் இடித்துஅகற்றம்
திருச்சி, ஜூன் 15: திருச்சி தெப்பகுளம், பாலக்கரை பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன.
உச்சநீதிமன்ற உத்தரவின் படி அரசு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. தெப்பக்குளம் முதல் காந்தி மார்க்கெட் வரை உள்ள ஆக்கிரமிப்பு கோயில்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். அதன் தொடர்ச்சியாக ராமகிருஷ்ணா தியேட்டர் அருகே சர்வீஸ் ரோட்டில் உள்ள தர்கா, தெப்பக்குளம் சிக்னல் அருகே உள்ள தர்கா, பாலக்கரை பருப்புக்கார தெரு முகப்பில் உள்ள தர்கா ஆகியவை பொக்ளின் இயந்திரங்கள் உதவியுடன் நேற்று அகற்றப்பட்டன. கே.கே.நகர் சாத்தனூர் மெயின் ரோட்டில் இருந்த முருகன் கோயிலை அதன் நிர்வாகிகளே அகற்றினர்