Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனுமதியற்ற விளம்பரம் அகற்ற உத்தரவு

Print PDF

தினகரன் 18.06.2010

அனுமதியற்ற விளம்பரம் அகற்ற உத்தரவு

கோவை, ஜூன் 18: கோவை நகரில் உலக தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக, சாலையோரத்தில் சுவர் ஓவியம் வரைப்படுகிறது.

நகர் பகுதி சாலை ஓர சுவர்கள் தமிழ் கலாச்சாரம், பண்பாடு, தமிழர்களின் வாழ்க்கை முறை ஓவியங்களால் அழகாகி வருகிறது. ஆனால் சில இடங்களில் ஆட்சேபகரமான சுவர் விளம்பரம், அனுமதி பெறாத விளம்பர பலகைகள் அகற்றப்படாமல் இருக்கிறது. அனுமதியற்ற விளம்பர பலகைகள் கட்டங்களின் மேல் வைக்கப்பட்டுள்ளது. இவற்றை 3 நாளில் அகற்றவேண்டும். அனுமதி பெற்று பலகை வைத்தவர்கள் அந்த விவரங்களை எழுதி வைக்கவேண்டும். 3 நாளில், பலகை வைத்தவர்கள் அகற்றவேண்டும். விளம்பர நிறுவனங்கள், வியாபாரிகள், கட்டட உரிமையாளர்கள், விளம்பர பலகையை அகற்றி நகர சாலையை அழகாக மாற்றவேண்டும். கோவை மாநகருக்கு செம்மொழி மாநாடு நேரத்தில் பெருமை சேர்க்கவேண்டும் என கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.