Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஐ.என்.ஏ. மார்க்கெட்டில் 36 கடைகள் தரைமட்டம்

Print PDF

தினகரன் 29.06.2010

.என்.. மார்க்கெட்டில் 36 கடைகள் தரைமட்டம்

புதுடெல்லி, ஜூன் 29: நகரை அழகுப்படுத்தும் பணியின் ஒரு கட்டமாக ஐ.என்.. மார்க்கெட்டில் உள்ள காஷ்மீர் வியாபாரிகளின் 36 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக இடித்து தள்ளினர்.

டெல்லியில் அக்டோபரில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளை முன்னிட்டு, நகரை அழகுபடுத்தும் பணிகளை மாநில அரசும், மாநகராட்சி நிர்வாகமும் மேற்கொண்டுள்ளன.

போட்டிகள் நடைபெறும் தியாகராஜா மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அழகுப்படுத்தும் பணிகளின் ஒரு கட்டமாக, .என்.. மார்க்கெட்டில் உள்ள 36 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் ஊழியர்கள் நேற்று முன்தினம் இடித்து தள்ளினர்.

1990ல் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்ததைத் தொடர்ந்து, அங்கிருந்து டெல்லிக்கு குடிபெயர்ந்தவர்கள், .என்.. மார்க்கெட்டில் 2001ல் கடைகளை திறந்து பிழைப்பு நடத்தி வந்தனர்.

கடையை இடித்ததால் வருத்தத்துடன் காஷ்மீர் வியாபாரி பட் கூறுகையில், "மாநகராட்சி முன்கூட்டியே எந்த நோட்டீசையும் எங்களுக்கு அளிக்காத நிலையில், கடைகளை இடித்து தள்ளியது சட்டவிரோதம். எங்களுக்கு வருமானம் தருவதற்கு இந்த கடை மட்டும்தான் இருந்தது. அதையும் இடித்து தள்ளியதால் எங்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது" என்றார். இன்னொரு வியாபாரி ஷாபாசி கூறுகையில், "தியாகராஜா மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை அழகுப்படுத்துவதற்காக கடைகளை இடித்ததாக கூறுகிறார்கள். மைதானத்தில் இருந்து நீண்ட தூரத்தில்தான் எங்கள் கடைகள் உள் ளன. உண்மை இப்படியிருக்க, கடைகளை எந்த முன்னறிவிப்புமின்றி இடித்து தள்ளிவிட்டனர். இந்த விஷயத்தை மாநில கவர்னர் தேஜேந்திரா கன்னாவின் கவனத்துக்கு கொண்டு சென்று நியாயம் கேட்போம்" என்றார்.