Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமலர் 23.07.2010

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

குறிஞ்சிப்பாடி : வடலூர் பஸ் நிலையத்தில் நடை பாதைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.வடலூர் பஸ் நிலையத்தில் உள்ள நடை பாதைகளை கடை உரிமையாளர் கள் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை விரிவுபடுத்தி இருப்பதாகவும், இதனால் நடைபாதையை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக கலெக்டருக்கு புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில் குறிஞ்சிப்பாடி மண்டல தாசில்தார் வீரப் பன், வடலூர் பேரூராட்சி செயல் அலுவலர் விஸ்வநாதன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் விஜய் ஆனந்த் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஆக் கிரமிப்புகளை அகற்றினர்