மாலை மலர் 23.07.2010
உசிலம்பட்டியில் சாலையோர காய்கறி கடைகளை அகற்ற அதிகாரிகள் முடிவு
உசிலம்பட்டி, ஜூலை 23- உசிலம்பட்டி சந்தையில் உள்ள தமிழக அரசின் திட்டமான உசிலம்பட்டி உழவர் சந்தையை மேம் படுத்தும் பொருட்டு மாவட்ட கலெக்டரின் அறிவுரை யின்படி உசிலம்பட்டி நகராட்சி ஆணையாளர் அச்சையா, நகராட்சி அலு வலர்கள் மற்றும் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ராஜாமணி, உதவி நிர்வாக அலுவலர்கள் செந்தில்குமர், கலா மற்றும் வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் அப்தாயர், ராமசாமி, ராஜேந்திரன் ஆகியோர் உசிலம்பட்டி பஸ் நிலையம் மற்றும் பேரையூர் ரோடு சாலையோர தள்ளுவண்டி கடைகளை அகற்ற கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி காய்கறி கடை வியாபாரிகளை உழவர் சந்தையில் கடை அமைக்க கோரியும் பேச்சுவார்த்தை நடத்தினர். வியாபாரிகள் அனைவரும் கலந்து பேசி முடிவு செய்வதாக அவர்கள் கூறினர்.
அதிகாரிகள் உழவர் சந்தையை மேம்படுத்தும் பொருட்டு சாலையோர நடைபாதை காய்கறி கடைகளை அகற்ற முடிவு எடுக்கப்படும் என தெரி வித்து உள்ளனர். தற்போது உழவர் சந்தையில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. கடந்த 2 வருடமாக உழவர் சந்தை இயக்கப்படவில்லை.