Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமலர் 27.07.2010

ஆக்கிரமிப்பு அகற்றம்

அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் கேட் கடை பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக பெருமளவில் ஆக்கிரமிப்பு இருந்தது. பாலமேடு சாலையில் சிலர் மரக்கடை மற்றும் ஓட்டல் வைத்து ஆக்கிரமித்திருந்தனர். ஆக்கிரமிப்புகளை தாமாக அகற்ற வேண்டுமென சம்பந்தப்பட்டவர்களுக்கு அலங்காநல்லூர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல முறை தகவல் தெரிவித்தனர். யாரும் முன் வரவில்லை. இதனால் கலெக்டர் மற்றும் சமயநல்லூர் டி.எஸ்.பி., உத்தரவின் பேரில் பேரூராட்சி நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், தலைவர் அழகு உமாதேவி, இன்ஸ்பெக்டர் பவுன் உட்பட போலீசார் ஆக்கிரமிப்பு அகற்றினர்.