தினகரன் 27.07.2010
விருத்தாசலம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சி அதிரடி
உளுந்தூர்பேட்டை, ஜூலை 27: உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் உள்ள விருத்தாசலம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
உளுந்தூர்பேட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள திருவெண்ணைநல்லூர் ரோடு, சென்னை நெடுஞ்சாலை, விருத்தாசலம் சாலை, திருச்சி நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் உள்ள கடைகளுக்கு முன்பு கொட்டகை அமைத்து ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு இருந்தது. இதனை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படை யில் நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் பரந்தாமன் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி விருத்தாசலம் சாலை சென்னை நெடுஞ்சாலை, பேருந்து நிலையம் அருகில் உள்ள பகுதியில் நேற்று நடைபெற்றது. இதில் பத்துக்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். இது குறித்து உதவி கோட்ட பொறியாளர் கூறிய போது தொடர்ந்து உளுந்தூர்பேட்டை பகுதி யில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடை யூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
ஆக்கிரமிப்புகள் அகற் றிய பிறகு மீண்டும் கொட் டகை போட்டு ஆக்கிரமிப்பு செய்ய கூடாது. மீறினால் காவல்துறை மூலம் நட வடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.