Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மார்க்கெட் ஆக்கிரமிப்பு நகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினகரன் 27.07.2010

மார்க்கெட் ஆக்கிரமிப்பு நகராட்சி எச்சரிக்கை

வால்பாறை, ஜூலை 27: வால்பாறை புது மார்க்கெட்டில் சாலையோர கடைகள் வைத்திருப்போர் விடுமுறை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சாலையை ஆக்கிரமித்து கடைகளை பெரிதாக்கி விடுவதால் சந்தைக்கு வருபவர்கள் சாலையில் நடக்க முடியாமலும், இறைச்சி கடைகளுக்கு மற்றும் மீன் கடைகளுக்கு வாகனங்களில் செல்லமுடியாமலும் தவித்து வருகின்றனர்.

மேலும் சாலையின் நடுவே தள்ளுவண்டி கடை களும், நடைபாதை வியாபாரிகளும் ஆக்கிரமித்துவிடுவ தால் சந்தை நாளான ஞாயிற்று கிழமை பொதுமக்கள் கடைகளுக்கு செல்லமுடிவதில்லை. இதனால் மார்க்கெட் பகுதியில் உள்ள நிரந்தர கடைகளில் வியா பாரம் பாதிக்கப்படுவதாக மார்க்கெட் வியாபார சங்கத்தினர் புகார் தெரிவித்துவந்தனர். இதையடுத்து, வால் பாறை நகராட்சி செயல் அலுவலர் ராஜ்குமார் மார்க்கெட் பகுதிகளில் ஆக்கிரமிப்போர் மீதும், வழியில் கடை வைப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.