Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்

Print PDF

தினமலர் 28.07.2010

ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்

காரிமங்கலம்: காரிமங்கலத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. காரிமங்கலம் டவுன் பஞ்சாயத்தில் ராமசாமி கோவில், பாலக்கோடு ரோடு, மொரப்பூர் ரோடு, கடைவீதி, பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் நாளுக்கு நாள் ரோட்டின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகமாகி வருவதால் மேற்கண்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் மாநில நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் கொடுத்தனர்.நேற்று முன்தினம் டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் சேர்ந்து ரோட்டின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வருவதாகவும், அதனால் ஆக்கிரமிப்பாளர்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை தாங்களாக முன் வந்து அகற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.