Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சேத்துப்பட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமணி 30.07.2010

சேத்துப்பட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆரணி, ஜூலை 29: சேத்துப்பட்டு நகரில் ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றப்பட்டன. சேத்துப்பட்டில் உள்ள நான்கு முனை சந்திப்பில் உள்ள முக்கிய சாலைகளில் கடைகளுக்கு முன் ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

மேலும், இச்சாலைகளில் தள்ளுவண்டிகள், பூக்கடைகள், பழக்கடைகள், டீக்கடைகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இந்நிலையில், வியாழக்கிழமை இச்சாலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கடைகள் ஜேசிபி மூலம் அகற்றப்பட்டன.

போளூர் வட்டாட்சியர் செல்வரசு, நில அளவையர் நாராயண மூர்த்தி, நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியம், உதவிகோட்டபொறியாளர் ஐயாதுரை, டிஎஸ்பி முகமதுபலுல்லா உள்ளிட்டோர் இப்பணிகளை பார்வையிட்டனர்.