Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனுமதியின்றி கட்டப்பட்ட 4 கட்டிடங்கள் இடிப்பு

Print PDF

தினகரன் 02.08.2010

அனுமதியின்றி கட்டப்பட்ட 4 கட்டிடங்கள் இடிப்பு

நொய்டா, ஆக.2: டெல்லி அருகேயுள்ள தொழில் நகரம் நொய்டா. இந்த நகரத்தில் உள்ள கிரேட் இண்டியா பிளேஸ் மால் என்ற வணிக வளாகத்தில் பிரம்மாண்டமான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பொழுது போக்கு பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.

பூங்கா அருகே பல கட்டிடங்கள் அனுமதி இல்லாமலேயே கட்டுப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. அந்த கட்டிடங்களை இடிக்கும்படி ஏற்கனவே நொய்டா வளர்ச்சித் திட்டக் குழு பல முறை உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை வணிக வளாகம் கண்டு கொள்ளவே இல்லை.

இதைத்தொடர்ந்து அந்தக் கட்டிடங்களை நேற்று நொய்டா வளர்ச்சி திட்டக்குழு போலீஸ் உதவியுடன் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தள்ளியது. அனுமதி இன்று கட்டிடம் கட்டியதற்காக நொய்டா வளர்ச்சி திட்டக் குழுமம், யார் மீதும் வழக்கு பதிவு செய்யவில்லை..