தினமலர் 03.08.2010
நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கோவில்பட்டி
: கோவில்பட்டி நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.கோவில்பட்டி நகராட்சி எல்கைக்குட்பட்ட தெற்குபஜார் பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இருந்த அப்பகுதி கட்டிட உரிமையாளர்களால் ஆக்கிரமித்து எழுப்பப்பட்டிருந்த தட்டிகள், ஏ.சி.ஷீட்டுகள், படிக்கட்டுகள் போன்றவைகள் நகராட்சி ஆணையாளர் விஜயராகவன் உத்திரவின்பேரில் அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், நகரளவர், நகரமைப்பு ஆய்வாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.