Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாம்ராஜ் நகரில் சொந்த கடையில் ஆக்கிரமிப்பை அகற்றிய நகராட்சி தலைவர்

Print PDF

தினகரன் 09.08.2010

சாம்ராஜ் நகரில் சொந்த கடையில் ஆக்கிரமிப்பை அகற்றிய நகராட்சி தலைவர்

கொள்ளேகால், ஆக 9: கொள்ளேகால் நகராட்சி தலைவர் சிவக்குமார் ஆக்கிரமிப்பு செய்து கட்டியிருந்த கடைப்பகுதியை சாலை பணிக்காக நேற்று சொந்த செலவிலேயே இடித்தார்.

கொள்ளேகால் டவுன் பகுதிக்கு உட்பட்ட சாலைகள் விரிவாக்க பணியானது 17ம் தேதி தொடங்க உள்ளது. கொள்ளேகால் டவுன் பகுதிக்கு உட்பட்ட சாலைபகுதிகளை விரிவாக்கம் செய்ய அரசு ஏற்கனவே முடிவு செய்ததுள்ளது. இதனால் அப்பகுதியில் அரசின் அனுமதி பெறாத வீடுகள் அனைத்தும் இடிக்கபட உள்ளது.

அரசு அனுமதி பெற்ற வீடுகளை இடிக்கப்பட மாட்டாது. இதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 17 வரை உள்ளது என எம்எல்ஏ நஞ்சுண்டசாமி தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து நகரசபை தலைவர் சிவக்குமார் தனக்கு சொந்தமான டவுன் கடைவீதியிலுள்ள நகைக்கடையில் ஆக்கிரமிப்பு பகுதிகளை இடித்துவிட்டார்.

ஆனால் பொதுமக்கள் அரசிடம் தெரிவித்திருந்த கோரிக்கை இன்னும் கைவிடவில்லை. எந்த காரணத்தை முன்னிட்டும் எங்கள் இடங்களை விட்டு தர முடியாது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.