தினமணி 10.08.2010
செங்கல்பட்டில் ஆக்கிரமிப்புகள் நீக்கம்
செங்கல்பட்டு, ஆக. 9: செங்கல்பட்டில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை ஆக்கரமிப்புகள் அகற்றப்பட்டன.
÷செங்கல்பட்டில் கடந்த வாரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தொடர்ந்து 3 நாள்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸôர் உதவியுடன் சுமார் 1 கி.மீ. தூரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதற்குப் பிறகு பணிகள் நிறுத்தப்பட்டன.
÷இந்நிலையில் நகராட்சி சார்பில் திங்கள்கிழமை மாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.÷ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் புதிய பஸ்நிலையம் பின்புறம் உள்ள வேதா சிக்கன் சென்டர் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது, மற்ற ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு தனது ஆக்கிரமிப்பை அகற்றும்படி வேதா சிக்கன் சென்டர் உரிமையாளர் முத்து வேதபுரி கூச்சலிட்டு, மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டினார்.
÷அவரை போலீஸôர் தடுத்து நிறுத்தி கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர் அவரது கடை அகற்றப்பட்டது