Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆக்கிரமிப்பு நீக்கம் செங்கல்பட்டில் 3-வது நாளாக தொடர்ந்தது

Print PDF

தினமணி 12.08.2010

ஆக்கிரமிப்பு நீக்கம் செங்கல்பட்டில் 3-வது நாளாக தொடர்ந்தது

செங்கல்பட்டு, ஆக. 11: செங்கல்பட்டில் ஆக்கிரமிப்பு நீக்கும் பணி 3-வது நாளாக புதன்கிழமையும் நடைபெற்றது.

÷காவல் துறையினருக்கு கூட தகவல் தெரிவிக்காமல் எவ்வித முன்னறிவிப்பின்றி ராஜாஜி தெருவின் ஒருபகுதியில் மாலை 4 மணிக்கு மேல் ஆக்கிரமிப்பு நீக்கப்பட்டது. இது செல்வாக்கு உள்ளவர்கள் பகுதி என்பதால் மற்ற பகுதிகளில் நடந்ததுபோல முழுமையாக நீக்காமல் பெயருக்கு மேலோட்டமாக அகற்றியதாக கடை வியாபாரிகள் புகார் கூறினர்.

மேலும் திடீர், திடீர் என நகராட்சி எடுக்கும் முடிவினால் வியாபாரிகள் மட்டுமல்லாமல் அனைவரும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அகற்றும் பணியை மாலை நேரத்தில் நடத்தியதால் அவ் வழியே வந்த பள்ளி மாணவர்கள் வீடு திரும்புவதில் சிரமம் ஏற்பட்டது. ஆக்கிரமிரப்பு நீக்கும் பணி காரணமாக அப்பகுதியில் முழுமையாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.