Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி முன்வருமா?

Print PDF

தினமலர் 19.08.2010

ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி முன்வருமா?

திருப்பூர் : திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே 10 அடி அகல ரோட்டை ஆக்கிரமித்து கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தை மாநகராட்சி நிர்வாகம் அகற்றினால், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து காமாட்சி அம்மன் கோவில் வழியாக இலகு ரக வாகனங்கள் எளிதாக செல்ல முடியும். போக்குவரத்து நெரிசலும் குறையும்.

திருப்பூர் மாநகராட்சி 36வது வார்டுக்கு உட்பட்டது காமாட்சியம்மன் கோவில் வீதி. இவ்வீதியில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்டுக்கு செல்ல 10 அடி அகலத்தில் குறுக்குச்சந்து உள்ளது. புதிதாக அமைக்கப்பட உள்ள பொதுக்கழிப்பிடத்துக்கு பின்பகுதியில் இவ்வழித்தடம் செல்கிறது. இந்த வழித்தடம் மிக குறுகலான சந்தாக உள்ளது. அதில், ஏழு அடி வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பை மாநகராட்சி நிர்வாகம் அகற்றினால், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து டூவீலர்கள் செல்லும் அளவுக்கு பாதை அமைக்கலாம். ஆட்டோ, கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களும் இவ்வழியை பயன்படுத்த முடியும். பஸ் ஸ்டாண்டுக்குள் வாகனம் வருவதை தவிர்க்க, இந்த மாற்றுவழியை பயன்படுத்த முடியும். மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் தலையிட்டு, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையில் இறங்க மாநகராட்சி நிர்வாகத்துக்கு அறிவுறுத்த வேண்டும

Last Updated on Thursday, 19 August 2010 08:38