Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும்'

Print PDF

தினமணி 19.08.2010

"பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும்'

திருச்சி, ஆக. 18: திருச்சி மாநகரில் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருச்சி மாநகராட்சிப் பகுதியில் உள்ள தார்ச் சாலைகள், சிமென்ட் கான்கிரீட் தளங்கள் மற்றும் நடைபாதையுடன் கூடிய மழைநீர் வடிகால்கள் ஆகியவை தரமாக அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மாநகராட்சிப் பகுதியில் ஒரு சில இடங்களில் சாலைகளைச் சேதப்படுத்தி விளம்பரப் பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை சம்பந்தப்பட்டவர்களே அகற்றிக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில், அவை மாநகராட்சி நிர்வாகத்தால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அகற்றப்படும். அதேநேரத்தில், பல்வேறு விழாக்கள், நிகழ்ச்சியின் போது அரசு விதிகளுக்கு உள்பட்டு விளம்பர பேனர்கள் வைத்துக் கொள்ளலாம். இந்த நடவடிக்கைக்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார் அவர்.