Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ9 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

Print PDF

தினகரன் 26.08.2010

ரூ9 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

பெங்களூர், ஆக. 26: பெங்களூர் பொம்மனஹள்ளியின் சர்வே எண் 44/9 மற்றும் 52/4 ஆகியவற்றில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை கேரளா ரோட்வேஸ் மற்றும் பட்டேல் ரோட்வேஸ் ஆகிய 2 நிறுவனங்கள் ஆக்கிரமித்து குடோன் அமைத்திருந்தன. இதுகுறித்து மாநகராட்சிக்கு தகவல் கிடைத்தது. மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய சர்வேப் பணிமூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து பெங்களூர் வளர்ச்சி குழும அதிகாரிகள், ஜே.சி.பி இயந்திரங்களின் உதவியுடன் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும¢ பணியில¢ ஈடுபட்டனர். போலீஸ் உதவியுடன் பணிகள் நடைபெற்றன. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ9 கோடி என்று தெரியவந்துள்ளது.