தினகரன் 30.08.2010
ஆர்.எஸ்.மங்கலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஆர்.எஸ்.மங்கலம், ஆக. 30: ஆர்எஸ் மங்கலம் பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன. ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி பகுதியில் ஏராளமான சாலையோர ஆக்கிரமிப்புகள் இருப்பதாக புகார்கள் வந்தன. திருவாடானை தாசில்தார் முருகேசன், பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினரும். இன்ஸ்பெக்டர் பில்லத்தியான் தலைமையில் போலீசாரும் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆர்எஸ் மங்கலத்தில் உள்ள டி.டி.மெயின்ரோடு, பரம்பைரோடு. நகைக்கடைபஜார். புல்லமடை சாலை. பஸ் ஸ்டாண்ட் வளாகம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். போக்குவரத்திற்கு இடையூறும் செய்யும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை பறிமுதல் செய்து பேரூராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதனால், நேற்று ஆர்எஸ் மங்கலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.