தினகரன் 02.09.2010
காஜாமலை பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் மாநகராட்சி கமிஷனர் தகவல்
திருச்சி
, செப். 2: காஜாமலை பகுதியல் உள்ள ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் பால்சாமி தெரிவித்தார்.காஜாமலை
, நடுத்தெரு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாக அப்பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ரவி மாநகராட்சியில் புகார் அளித்தார். புகாரை அடுத்து மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற நேற்று முன்தினம் அங்கு சென்றனர். அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் சிலர், மாநகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கொட்டகையை அகற்றினால் தீக்குளிப்பதாகவும் மிரட்டல் விடுத்ததை அடுத்து மாநகராட்சி ஊழியர்கள் திரும்பி சென்றனர். தகவல் அறிந்த கே.கே.நகர் போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பால்சாமி கூறுகையில்
, இதுபற்றி கே.கே.நகர் போலீசில் தகவல் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் விரைவில் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அப்பகுதியில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கவோ அல்லது மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டவோ எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்றார்.