Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருத்துறைப்பூண்டி நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினகரன் 09.09.2010

திருத்துறைப்பூண்டி நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருத்துறைப்பூண்டி, செப். 9: திருவா ரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா முழுவதிலிருந்தும் வங்கிகள், பள்ளிகள், கோயில் கள் போன்றவற்றைக்கு திருத்துறைப்பூண்டி நகருக்குதான் வரவேண்டும். மேலும் திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர், மன்னார்குடி, நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு வாகனங்கள் இதன்வழியாகத்தான் செல்லவேண்டும்.

நகரில் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருந்துவருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தினமும் பல மணி நேரம் பொதுமக்கள் தவித்துவருகின்றனர். நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை இணைந்து அடிக்கடி போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். ஆக்கிரமிப்புகள் அகற்றி சில தினங்களிலேயே மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விடுகின்றன.

இந்நிலையில் கலெக்டர் சந்திரசேகரன் உத்தரவின் பேரில் நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை சார்பில் நகராட்சி துப் புரவு ஆய்வாளர் ராமச்சந்திரன், நகர அமைப்பு ஆய்வாளர் நேதாஜி மோகன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் திராவிடமணி, காவல் ஆய்வாளர் மதியழகன் ஆகி யோர் தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று நடைபெற் றது. புதிய பஸ் நிலையம், உழவர் சந்தை முன்புறம், கோர்ட் முன்புறம் உள்ள ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன. நகர பகுதியில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூராக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் திருமலைவாசன் தெரிவித்துள்ளார்.