தினமலர் 09.09.2010
தி.பூண்டி கோர்ட் முன் ஆக்கிரமிப்பு அகற்றம்
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி நீதிமன்றம் மற்றும் உழவர் சந்தை அருகே இருந்த ஆக்ரமிப்புக்கள் அகற்றப்பட்டன.
திருத்துறைப்பூண்டி நீதிமன்றம் முன் சிறுகடை வைத்து போக்குவரத்துக்கு இடையூறாகவும், நீதிமன்றத்துக்கு வரவும் இடையூறாக இருந்த கடைகளை உரிமையியல் நீதிபதி நாகராஜன் உத்தரவுப்படி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் திராவிடமணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீஸார், நகராட்சி ஊழியர்கள் சேர்ந்து நீதிமன்றம் முன்பாக இருந்த ஆக்ரமிப்புக்களை அகற்றினர்.
அவற்றை நகராட்சியின் லாரியில் ஏற்றிச் சென்றனர். உழவர் சந்தை எதிரே இருந்த ஆக்ரமிப்புக்களையும் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அகற்றினர்.