தினகரன் 15.09.2010
சந்திரா லே&அவுட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பெங்களூர், செப். 15: மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. பெங்களூர் சந்திராலேஅவுட் காவல்சரகம், நாகர்பாவி சர்வே எண் 129ல், மாநகராட்சிக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலமுள்ளது. அங்கு சிலர் ஆக்கிரமித்து வீட்டு உபயோகப் பொருள் ஷோரூம், வாகன காரேஜ் உள்ளிட்ட 6 கட்டிடங்களை எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக தொடர்ந்த வழக்கில் மாநகராட்சிக்கு ஆதரவாக ஐகோர்ட் தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து நேற்றுகாலை அங்கு சென்ற பிடிஏ அதிகாரிகள் புல்டோசர்களின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். முன்னறிவிப்பு இன்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக கூறி அங்குள்ள வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆயினும் போலீஸ் பாதுகாப்புடன் மீட்கப்பட்ட இடத்தில் இரும்பு வேலி அமைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் நேற்று அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.