Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சொட்டைதட்டி வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி 20.08.2009

சொட்டைதட்டி வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதுரை, ஆக. 19: மதுரை குருவிக்காரன் சாலையில் உள்ள சொட்டைதட்டி வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை, மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அப்புறப்படுத்தினர்.

ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின்கீழ் சொட்டைதட்டி வாய்க்கால் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக குருவிக்காரன் சாலை வைகை ஆற்றின் தென்புறம் வாய்க்காலை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த வீடுகள், தகர செட்டுகள் அப்புறப்படுத்தப்பட்டன.

மாநகராட்சி நகரமைப்புப் பிரிவு மற்றும் பொறியியல் பிரிவினர் இப்பணியை மேற்கொண்டனர்.