தினமலர் 14.10.2010
கொரட்டூரில் ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றம்
அம்பத்தூர்
: கொரட்டூர் பஸ் நிலையம் அருகே, நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு வீட்டை நகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர்.கொரட்டூர் பஸ் நிலையம் அருகே, அம்பத்தூர் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வீடு மற்றும் கடைகள் கட்டப்பட்டிருந் தன.இந்த இடத்தை மீட்க நகராட்சி முடிவு செய்தது. நகராட்சி கமிஷனர் ஆஷிஷ் குமார் உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரிகள், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு வீட்டை இடித்தனர். மீட்கப்பட்ட இந்த இடத்தின் மதிப்பு 50 லட்ச ரூபாய்.